மறந்தேன் ..தவறு !
ஒவ்வொரு நொடிக்கும் ..துடிக்கும் இதயத்தை மறந்தேன்
ஒவ்வொரு நொடிக்கும் ..உள்வாங்கும் மூச்சையும் மறந்தேன்
ஒவ்வொரு நொடிக்கும் ..என் எதிரில் நீ இல்லாமல் இருக்கும் போது , என் பார்வையில் பட்டதெல்லாம் மறந்தேன்
ஒவ்வொரு நொடிக்கும் ..உன் நினைவை தவிர , மற்ற எல்லா நினைவுகளையும் மறந்தேன்
ஒவ்வொரு நொடிக்கும் ..உன் குரலே காதில் ஒலிப்பதால் ,என்னை சுற்றி எழும் சத்தத்தை மறந்தேன்
....
...
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் மறந்தேன் என்பது தவறு. ..பிரபஞ்சமே நீ என ..என் பார்வையில் , என் பேச்சில், என் நினைவில் - நான் இருப்பது தான் சரி.