Monday, July 11, 2022

பிடித்தவை அருகில்.

பிடித்தவை அருகில் மனதிற்கு அருகில்.

உன்னை போல் ஏழு பேரு ..இல்லை உன்னையும் சேர்த்து ஏழு பேரு.

நீ தான் ஏழாவது .......அதிசியம்..!!. 

உன்னை போல மீண்டும் ஒருவரை பார்க்க வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் ஒரு கால கட்டத்திற்கு அப்பால் புதிதாக மனசுக்கு பிடிக்க எதுவும் இல்லை.

ஒரு வேலை உன்னை பார்க்காமல் இருந்து இருந்தால் ...அந்த காலம் எப்போவது வரும்.

எப்படியோ பார்த்தது ...மீண்டும் பார்ப்பேனா ..என்பது போயி , மீண்டும் பேசுவானா..என்பது போயி ..அருகிலே வந்து விட்டாய் ..என் மனதருகிலே வந்துவிட்டாய்...ஆனால் மனதோ என்னிடம் இல்லை !!!


 

Thursday, July 7, 2022

உயிரானவள் !!!

என் மனதுக்குள் இருக்கும் பட்டு போன காதலுக்கு உயிர் கொடுத்தது உன் முகம் 

கடந்து போன காதலும் விட்டு போன, விட்டு வந்த காதலும் அனைத்தையும் ஒன்று சேர்ந்து இருந்த ஒட்டுமொத்த மறதிகளுக்கும் நினைவூட்டியது உன் முகம் 

இதனை நாளா நான் பார்க்காமல் இருந்தது துரதிஷ்டம் ..இனி நீ காற்றாய் , சத்தமாய் இயங்கி கொண்டே இருப்பாய் என் உடம்பில் ..என் மனசு உயிரோட்டமாய் இருக்கும் உன் முகம் நினைவில் உள்ளவரை இனி பார்த்தாலும் பார்க்க விட்டாலும்.!!!

Monday, July 4, 2022

நீ இல்லை என்றால்

நீ இல்லை என்றால் , என்னால் வாழ முடியாது என்று இல்லை. வருத்தங்களும் துன்பங்களும் துரத்தி கொண்டே இருப்பதில்லை. உன்னை போல் 7  பேர்....இந்த உலகில் எங்காவது ஒரு ஊரில் இருப்பார்கள் கண்ணில் படுவார்கள் ...அது போதும் ..உன்னையும் நினைவுகளையும் உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும் ..நீ என்பது எனக்கு பிடித்தவை..பிடித்தவள் போனாலும் பிடித்தவை மனசில் இருந்துகொண்டே இருக்கும் ..நீ இல்லை என்றாலும் எனக்கு பிடித்தவை என் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்..நீயும் நினைவுகளும் பட்டு போகாமல் இருந்து கொண்டே இருக்கும் காலம் வரைக்கும். 


Friday, July 1, 2022

வேரெதுவும் இல்லை

பார்ப்பது எதுவாக இருந்தாலும் கண்ணுக்குள் நீ மட்டுமே தெரிகிறாய்

கேட்பது எதுவாக இருந்தாலும் காதுக்கு உன் குரல் மட்டுமே ஒலிக்கிறது 

பேசுவது எதுவாக இருந்தாலும் மனதுக்குள் உன் பேரை மட்டுமே உச்சரிக்கிறது 

நினைப்பது மட்டும் வேரெதுவும் இல்லை உன்னை தவிர...

Tuesday, June 28, 2022

அதுவா ..நடக்கும்..


ஓராயிரம் நாட்கள் விலகி இருந்தாலும், ஈராயிரம் மையில்களுக்கு அப்பால் இருந்தாலும்...இதயத்தில் ஓடும் இரத்தம் போல உன்னை பற்றிய நினைப்பு ஓடிக்கொண்டே இருக்கும். 

ஒரே பார்வையிலும் , ஒரே வார்த்தையிலும் அனைத்து சிந்தனைகளும் பரிமாறி இருக்கும் நம் மனதுக்குள். காலமும் விதியும் நம்மை எங்கு இருந்தாலும் மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கும்..அதுவா நடக்கும்..அது தான் உண்மையான நேசிப்பு. 

Monday, June 27, 2022

அதிசயமும் அதிர்ஷ்டமும்

 அதிசயமும் அதிர்ஷ்டமும் 


வாழ்க்கையில் எப்பாவது அதிசயமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். அது அடிக்கடி நிகழ்வதெல்லாம் பேரதிசயம் பேரதிஷ்டம் ...அப்படி என்ன அது?


நீ யாரோ நான் யாரோ ..ஆனால் உன்னை பார்ப்பதும் உன்னிடம் பேசுவதும் இதை தவிர வேற என்ன இருக்க முடியும். இது கடந்து போன அத்தனை  ஜென்மங்களிலும்   நான் செய்த புண்ணியம் ....

Saturday, June 25, 2022

பார்த்தாலே போதும்.

உன்னை பார்க்கும் போது என்னுள் பட்டாம் பூச்சி பறப்பதில்லை, நெஞ்சம் பதைப்பதில்லை . மாறாக   உன்னை பார்த்தது. ,மனதுக்குள் அவ்வளவு சந்தோசம் ..நிம்மதி ..அந்த ஒரு சில வினாடிகள். இது இந்த ஜென்மத்தின் பேரதிஷ்டம்.. .நீ மட்டும் சொர்க்கம் இல்லை நீ இருக்கும் இடமும் சொர்க்கம் தான். கணக்கில் அடங்கா ஜென்மத்திலும் உன்னை பார்க்கும் வரம் வேண்டும்..பேரதிஷடம் வேண்டும் .