Monday, February 27, 2023

உயிரானவள்...


அத்தனை நட்சத்திரங்களும் சேர்ந்தாலும் உன்னால் என்னுள் ஏற்படும் வெளிச்சம் பல பிரபஞ்சகளை தாண்டியும் ஒளிரும் 

ஆயிரம் வெற்றிகள் பெற்றாலும் கிடைக்காத ஆனந்தம்  உன்னை பார்க்கும் போது ஏற்படும் பேரானந்தம் 

மலையையும் மழையையும் , மண்ணையும் , மரங்களையும் , மலர்களையும் பார்க்கும் போது வாராத ஆனந்தம் உன்னை பார்க்கும் போது வருகிறது பேரானந்தம்

கடந்த போன  கோடிக்கணக்கான  ஆண்டுகளோ இல்லை இன்னும் கணக்கில் எண்ணமுடியாது முடிவில்லா ஆண்டுகளோ அத்தனை காலத்திற்கும் நீயே வியாபித்து இருப்பாய் . 

தாங்க முடியாத சோதனைகள் வந்தாலும் , நீ நினைவில் வரும் போது அத்தனையும் காணாமல் போகும் 

நினைவிலும், பேச்சிலும், பார்வையிலும் இரத்ததிலும் உயிரானவள்

பல பிரபஞ்சம்களுக்கு  தாயுமானவள்...

என்னை மீட்டு மீண்டும்  உயிர் கொடுத்தவள் .

.என் உயிரானவள்.  

 

Wednesday, February 15, 2023

நாகரிக மனிதனாக...

நாகரிக மனிதனாக...


என்னை நாகரிக மனிதனாக நினைத்துக்கொண்டேன் 

நினைப்பதெல்லாம் பேச  முடியாது

செய்வது எல்லாம் செய்ய முடியாது 

மனிதமற்று முயற்சித்தாலும் சீரழிந்து போவேன் இந்த நவநாகரீகத்தில்

என்னை நான் மறந்தால்

என்னை நான் தொலைத்தால் உன்னை மறப்பதற்கும் தொலைப்பதற்கும் சமம்.

என்னருகில் எனக்காக நீ உனக்காக நான் இல்லாவிட்டாலும் 

உன்னை பார்ப்பதும் ,நினைப்பதும் சுகம், நிம்மதி, சந்தோசம் ..

என்னால் உனக்கு சந்தோசமா நிம்மதியா என தெரியாது. 

உனக்கு தொல்லை இல்லாமல் தள்ளி நின்று நேசிப்பது தான் 

என்னை நான் நாகரிக மனிதனாக நினைக்கிறேன்..

எனக்கு மட்டுமல்ல இந்த நாகரிக சமூகத்துக்கும் தான்.


Tuesday, February 14, 2023

உனக்கு தெரியாது தான்

உனக்கு தெரியாது தான் 

இயற்கையை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று இயற்க்கைக்கு தெரியாது 

மழையை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று மழைக்கு  தெரியாது 

பூக்களை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று  பூக்களுக்கு தெரியாது 

வானத்தை   யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று வானத்துக்கு   தெரியாது 

மலையின் அழகை  யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று மலைக்கு   தெரியாது 

---

அது போல 

---

உன் அழகை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று உனக்கு தெரியாது 

நீ தான் பிரபஞ்ச அழகி என்று இந்த பித்தன் பிதற்றுவதும் உனக்கு  தெரியாது


என் மனசை பற்றி உனக்கு தெரியாது தான் 


 


Monday, February 13, 2023

உணர்வகளும், உணர்ச்சிகளும்

உணர்வகளும், உணர்ச்சிகளும் 

என்னின் ஒரே மாதிரியான உணர்வுகளோ, உணர்ச்சிகளோ மட்டுமே உன்னை  நேசிப்பதாகாது...

உன் எல்லா உணர்வுகளுக்கும்  உணர்ச்சிகளும் மறைந்து இருக்கிறது  என்னுள்ளும் 

ஆச்சரியமும்  இல்லை ஆத்திரமும் இல்லை எப்பவும் கடலில் விழுந்த பெருக்கல் போல தான் என்னுள் நீ புதைந்து இருக்கிறாய். 

உன் உணர்ச்சி ததும்பலும் , முதுமையாகின்ற தோலும் என் கண்களை தாண்டி உளளே செல்வதில்லை.

இதயம் என்னும் மூளைக்குள் முத்தெடுக்கிறாய்.

நீ தொலையாமலே உன்னை தேடுகிறேன் வெளியே !

உணர்வுகளும் உணர்ச்சிகளும் காட்டாமலே உளளே !!


 


Wednesday, February 8, 2023

உன்னருகில் நானிருக்கும் போதும்!

 உன்னருகில் நானிருக்கும் போதும்!


அது போதுமே ..உன்னருகில் நானிருந்தால்.. வேற என்ன வேணும்?

வாயடைத்து போகவில்லை ...

செவிமடுத்து போகவில்லை ..

கண்ணிமைக்க வில்லை..

அத்தனையும் உன்னை மட்டுமே உள்ளடக்கியது ..

மனம் மட்டும் என்னை விட்டு உன்னோடு பல பிரபஞ்சகளை கடந்து சென்று கொண்டு இருந்தது..

பிரபஞ்சத்துக்கு எல்லை இல்லை..

உன்னை நேசிப்பத்துக்கும் ஒரு அளவே இல்லை. 

என் அதனை செல்களையும் செதுக்கிறாய்..உயிரோடு..!!!.

Saturday, February 4, 2023

என்ன தவம் செயதேன்!!

 என்ன தவம் செயதேன்!! 

உன்னருகில் ..

உன்னெதிரில் ..

கண்கள் பார்க்க

செவிகள் கேட்க 

மனம் நினைக்க ...

பல ஆயிரம் நொடிகள் கடக்க ..

 இதற்காகவா ஏழு ஜென்மங்களாகா தவம் செயதேன்?