Sunday, March 25, 2007

சுயசிந்தனை பயம்

வெளிபடையாக என் சுய சிந்தனை எத்தனையோ தடவை
என் மனதின் எண்ணங்களை திசை திருப்ப முயற்சி செய்து இருக்கிறது
உன்னை நினைக்கும் போதெல்லம்.

உன்னை நினைக்காத போது நான் புரிந்து கொண்டது ஏதெனில்
என் சுய சிந்ததனையே உன்னை நினைக்கவே மறுபடியும் தோன்றுகிறது.

நான் யோசித்தவைகளிலே, நினைத்தவைகளிலே நீ மட்டுமே முதன்மையாக இருக்கிறாய்.
என்னை பற்றி நினைக்கும் பொது எல்லாம் கூட
அது உன்னக்ககாவே நினைக்க தோன்றுகிறது.

இன்னமும் என்னிடம் நீ சேரவில்லை,பரவாயில்லை
என் சுயசிந்தனை பறிக்க முயலாதே என் கண்ணில் பட்டு.
எனக்கு என்னமோ பயமாக இருக்கிறது
என் சுயசிந்தனை நீயாகவே மாறிவிடுமோ என்று.

Saturday, March 24, 2007

முகவரி கொடுத்தவளே

உலகிற்கு என் முகவரியை கொடுத்துவர்கள் என் பெற்றோர்கள்
எனது உண்மைகளை தெரிந்து கொண்டார்கள்...!

உன்னால் என் மனதிற்கு முகவரியை கொடுத்தவள் நீ
எனது உனர்வுகளை தெரிந்து கொண்டேன்...!

உன்னை தெரிந்து கொள்ள
என்னை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...!

உன்னை அறிந்து கொள்ள
என்னை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...!

உன்னை புரிந்து கொள்ள
என்னை இழக்க வேண்டி இருக்கிறது...!

உலகுக்கு இறுதியில் 'சுடுகாடு' தான் என் முகவரி உணர்த்தி விட்டாய்
உன் முகவரிய நான் அடையும் முன்பே...!

எப்பொழுது தோன்றியது?

என்னில் கவிதை தோன்றியது எப்போது?
என்னில் சிந்தனை தோன்றியது எப்போது?
நீ என் கண்ணெதிரே தோன்றிய போதா?
என் கேள்வி கவிதைக்காக சிந்திக்க ஆரம்பித்தேனா?
இல்லை
உனக்காக சிந்திக்க ஆரம்பித்தேனா?
எனக்கென்னவோ சிந்தித்தது கவிதைக்காகவே என்று தோன்றினாலும்,
உன்னை பார்த்த பிறகு;
உன்னால் என்னை மறந்த பொழுது தோன்றியதே என் மனதில்,
கவிதையும் சரி,
சிந்தனையும் சரி.

உன் நினைவுகள்

என் மூளையில் உள்ள கோடிக்கணக்கான நியுரான் செல்களிலும்
உன்னை பற்றிய எண்ணங்களே நிரம்பி இருக்கின்றன.

என் இதயத்தில் நினைவுகளாய் இருக்கிறாயா என்று தெரியாது,
ஏனென்றால் நீ மட்டுமே என் எண்ணங்களை தெரிந்து கொள்ள் முடியும்.
இருந்தாலும் என்னால் சொல்ல முடியும்
என் ஒவ்வொரு இதய துடிப்பும் உன் பேரோட ஒலியே எழுப்புகின்றன என...!

Thursday, March 22, 2007

என் காதலி

எத்தனையோ நிகழ்வுகளை கண்டு நான்
இது தான் வாழ்க்கை, இது தான் உலகம் என்று இருந்தேன்
உன்னை
முதலா முதலா பார்க்கும் வரை, நினைக்கும் வரை.
அதற்கு பிறகும்
எத்தனையோ நிகழ்வுகளை கண்டு கொண்டு இருக்கிற நான்,...
இன்னமும்
என் உலகமாய்
என் வாழ்க்கையாய்
நீயே
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாய்!