Saturday, July 28, 2007

நினைத்தது மட்டும்

எத்தனை பெண்களை பார்த்த் இருக்கிறேன் இதுவரையிலும். அவர்களில் சிலரை பார்க்கும் போது இவர்களே எனக்கு மனைவியாக தோழியாக வர வேண்டும் என்று நினைத்தது உண்டு. வந்தால் எவ்வளவு சந்தோசமாக வாழ்க்கை இருக்கும் என்று எண்ணி பார்த்தது உண்டு.அவர்கள் மனதுக்குள் சில நிமிடங்கள் தேவதையாக அழகியாக தோன்றியது உண்டு. இப்படி மனதுக்குள் வந்து போனவர்கள் ஏராளம். நினைவில் நிறுத்தி பார்க்க முடியாத அளவுக்கு பல சம்பவங்கள்.அத்தனை பேரிலும் எனக்கு யாரும் இன்றுவரைமனைவியாகவும் இல்லை, தோழியாகவும் இல்லை, காதலியாகவும் இல்லை.
அவர்களை நினைத்த்து போலவே உன்னையும் நினைத்து இருக்கிறேன்உன்னை முதன் முதலாக பார்த்த போது.எனக்கு, எனக்குள் நீ காதலியாகவும், தோழியாகவும், மனைவியாகவும் ரொம்ப நாள் வாழ்ந்தாய். இப்பவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நிசத்தில் தராத சந்தோசத்தை நினைவில் தந்து கொண்டு இருக்கிறாய்.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்...அவர்களுக்கும் உனக்கும்அவர்கள் கிடைக்க வில்லை என்பதற்க்காகநான் வருத்த பட்டதில்லை கண்ணீர் விட்டதில்லை. நீ மட்டும் எனக்கு இல்லை என்றான போது,நீ மட்டும் என் மனைவியாக வில்லை என்ற போது வருத்த பட்டதிற்கு அளவே இல்லை, கண்ணீர்க்கு பஞ்சமே இல்லை.
இன்றும், என்றும் உனக்காக இந்த பிறவியில் உன்னை நான் இழந்ததற்காக,உன்னோடு வாழாமல் போனாதற்காக, என் மனதுக்குள் எப்பவும் வருத்தமும், கண்ணீரும் நிரம்பி இருக்கும்.

Wednesday, April 11, 2007

புரியவில்லையாடி

அப்பொழுது நீ பேசிய பேச்சுகள்
இப்பொழுது தான் புரிகிறது அவைகளை நினைவு கூரும் போது
இந்த அரமண்டை தலைய தலைய மட்டுமே ஆட்டியது அப்போது.
உன் பேச்சையும், உன்னையும் இரசிப்பதலையைய்யே காலம் கடந்தது.
இன்று உண்மையாகவே காலம் கடந்து உன் நினைவுகளை நிறுத்தும் போது
எத்தனை உள் அர்த்தத்தோடும். நுணுக்கமாகவும் பேசி இருக்கின்றாய்
ஆச்சர்யமாகவும், வியப்பாகவுமே இருக்கிறது இப்போதும் எனக்கு

புரியவில்லையடி.
- நீ புரிந்து கொண்டு தான் பேசினாயா? இல்லை
- எனக்கு (ஆவது) புரியும் என்று பேசினாயா?
புரியவில்லையாடி?
- நான் விவரம் இல்லாதவன் என்று உனக்கு புரியவில்லையாடி?
- நானும் உன்னை மாதிரி விவரமாக இருந்து இருந்தா விளைவுகள் விவகாரமாக அல்லவா முடிந்து இருக்கும் என்று.

உன்னோட நினைவுகள்

என்னிடம் இன்னமும் பத்திராமாக இருக்கிறது..
நீ கொடுத்த
வாழ்த்து அட்டைகள்.
மிட்டாய்
டைரிகள்
பேனாக்கள்
காதல் கடிதங்கள். இன்னும் பல...

நீ கொடுத்த அத்தனையும் பத்திரமாகவே வைத்து இருக்கிறேன்.
ஏன் தெரியுமா? உன் ஞாபகமாக இருக்கவா?

எனக்கு தெரியும்.
இந்த குரங்கு மனசு இன்னொரு பொண்ணுக்கும் இடம் கொடுக்கும்
உன் நினவுகள் அற்று போகும் ஒரு நாள்.


நான் காதலுக்கு கொடுக்கும் மரியாதை.
என் உள்ளத்தில் உன் நினைவுகளை வைக்கா விட்டாலும்
என் இல்லத்தில் வைக்க தான் நீ கொடுத்தவைகளை நினைவுகளாக!

அப்படி இல்லை என்றால்
என்னை வீட்டில் வைக்க மாட்டால்
என் புது மனைவி.

Monday, April 9, 2007

இன்னமும் தெரியவில்லை

நாலு விசயம் நல்லது கெட்டது அறியாத பருவம் எனக்கு
உன்னை பிடிக்க ஆரம்பித்தது.
இன்றளவும் நினைவில் தேடி பார்க்கிறேன்
உன்னை எனக்கு பிடித்து போன தருணத்தை.

எத்தனையோ நினைவுகளை என்னால் அசை போட முடிகிறது.
என் கண் பார்வையில் இருந்து மறைந்தாய்.
மற்றவனை கரம் பிடித்தாய்.

உன்னை பற்றி நிறையவே கேள்வி படுகிறேன்.
வருத்தமே இல்லை
எனக்கு நீ இல்லை என்ற போதிலும்.
ஆனாலும் உன் மீது நான் கொண்டு இருக்கும் பிடிப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது.

ஒரு வேலை நான் உன் எல்லாம் நினைவுகளையும் மறந்து போகலாம்
அந்த தருணம் உன்னை முதன் முதாலாக நான் விரும்பியதை நினைவில் கூர்வேயானால்
இல்லை இன்னொருத்தி என்னை ஆக்கிரமிப்பு கொள்ளும்வரை

அடி மனது சொல்லி கொண்டே இருக்கிறது

"உன்னவளின் நினைவுகளை அசை போட்டு கொண்டே இரு உன் உயிர் உள்ளவரை
ஏனென்றால் அவள் உன்னை விரும்பவும் இல்லை.
நீ இதுவரை அவளை வெறுக்கவும் இல்லை.

மற்றும்

உனக்கு அவள் இதுவரையிலும் வெறுத்ததாக தெரியவில்லை.
நீ விரும்பியதும் அவளுக்கும் இன்னமும் தெரியவில்லை."

Saturday, April 7, 2007

முத்தம் வாழ்க்கைகாகவே

காதலித்த போது
என்னின் ஒவ்வொரு செயல்களும்
உன்னிடம் இருந்து ஒரு முத்தமாவது
வாங்குவற்காகவே இருந்தது
ஆனால் நீ எந்த முயற்சி எடுக்காமலே
மிக சுலபமாக என்னிடம் இருந்து
எத்தனையோ முத்ததை வாங்கி கொள்கிறாய்.
நான் முத்தம் கொடுக்கவும் சரி முத்தம் வாஙகவும் சரி
நான் அதற்காக ஒரு போரட்டமே நடத்த வேண்டி இருந்தது.
என்னை நீ எதிர்த்து போராடாமலே ஜெய்த்து இருக்கிறாய் பல தடவை.
ஆயிரம் முறை நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் தோற்றாலும்
ஒரு முறை என்னிடம் நீயாகவே கொடுத்த முத்தத்தினால்
உன் உயிரையே கொடுத்து என்னை ஜெய்க்க வைத்தாய்.
இப்பொழுது தான் புரிகிறது நான் வெறும் முத்ததிற்காகவே போராடி இருக்கேன்....
நீயோ எனக்காகவே போராடி இருக்கிறாய் என்று!

Sunday, March 25, 2007

சுயசிந்தனை பயம்

வெளிபடையாக என் சுய சிந்தனை எத்தனையோ தடவை
என் மனதின் எண்ணங்களை திசை திருப்ப முயற்சி செய்து இருக்கிறது
உன்னை நினைக்கும் போதெல்லம்.

உன்னை நினைக்காத போது நான் புரிந்து கொண்டது ஏதெனில்
என் சுய சிந்ததனையே உன்னை நினைக்கவே மறுபடியும் தோன்றுகிறது.

நான் யோசித்தவைகளிலே, நினைத்தவைகளிலே நீ மட்டுமே முதன்மையாக இருக்கிறாய்.
என்னை பற்றி நினைக்கும் பொது எல்லாம் கூட
அது உன்னக்ககாவே நினைக்க தோன்றுகிறது.

இன்னமும் என்னிடம் நீ சேரவில்லை,பரவாயில்லை
என் சுயசிந்தனை பறிக்க முயலாதே என் கண்ணில் பட்டு.
எனக்கு என்னமோ பயமாக இருக்கிறது
என் சுயசிந்தனை நீயாகவே மாறிவிடுமோ என்று.

Saturday, March 24, 2007

முகவரி கொடுத்தவளே

உலகிற்கு என் முகவரியை கொடுத்துவர்கள் என் பெற்றோர்கள்
எனது உண்மைகளை தெரிந்து கொண்டார்கள்...!

உன்னால் என் மனதிற்கு முகவரியை கொடுத்தவள் நீ
எனது உனர்வுகளை தெரிந்து கொண்டேன்...!

உன்னை தெரிந்து கொள்ள
என்னை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...!

உன்னை அறிந்து கொள்ள
என்னை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...!

உன்னை புரிந்து கொள்ள
என்னை இழக்க வேண்டி இருக்கிறது...!

உலகுக்கு இறுதியில் 'சுடுகாடு' தான் என் முகவரி உணர்த்தி விட்டாய்
உன் முகவரிய நான் அடையும் முன்பே...!

எப்பொழுது தோன்றியது?

என்னில் கவிதை தோன்றியது எப்போது?
என்னில் சிந்தனை தோன்றியது எப்போது?
நீ என் கண்ணெதிரே தோன்றிய போதா?
என் கேள்வி கவிதைக்காக சிந்திக்க ஆரம்பித்தேனா?
இல்லை
உனக்காக சிந்திக்க ஆரம்பித்தேனா?
எனக்கென்னவோ சிந்தித்தது கவிதைக்காகவே என்று தோன்றினாலும்,
உன்னை பார்த்த பிறகு;
உன்னால் என்னை மறந்த பொழுது தோன்றியதே என் மனதில்,
கவிதையும் சரி,
சிந்தனையும் சரி.

உன் நினைவுகள்

என் மூளையில் உள்ள கோடிக்கணக்கான நியுரான் செல்களிலும்
உன்னை பற்றிய எண்ணங்களே நிரம்பி இருக்கின்றன.

என் இதயத்தில் நினைவுகளாய் இருக்கிறாயா என்று தெரியாது,
ஏனென்றால் நீ மட்டுமே என் எண்ணங்களை தெரிந்து கொள்ள் முடியும்.
இருந்தாலும் என்னால் சொல்ல முடியும்
என் ஒவ்வொரு இதய துடிப்பும் உன் பேரோட ஒலியே எழுப்புகின்றன என...!

Thursday, March 22, 2007

என் காதலி

எத்தனையோ நிகழ்வுகளை கண்டு நான்
இது தான் வாழ்க்கை, இது தான் உலகம் என்று இருந்தேன்
உன்னை
முதலா முதலா பார்க்கும் வரை, நினைக்கும் வரை.
அதற்கு பிறகும்
எத்தனையோ நிகழ்வுகளை கண்டு கொண்டு இருக்கிற நான்,...
இன்னமும்
என் உலகமாய்
என் வாழ்க்கையாய்
நீயே
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாய்!