Tuesday, July 19, 2022

பிடித்தல்...வரை!!!


ஆசை, நேசம், அன்பு, காதல் , பரிவு , ரசிப்பு - இவைகள் எல்லாம் ஒன்றை மட்டும் குறிக்கும் சொல் பிடித்தல் ..மனதுக்கு பிடித்து போனால் அவைகள் எப்படி வேணும்னாலும் சொல்லலாம்.


மனதுக்கு இன்னொன்று வேணும்னாமலும் பிடித்து போகலாம், பிடித்தது பிடிக்காமல் போகலாம்... ஆனால் என்ன காரணங்களுக்காக பிடித்தததோ அந்த காரணங்கள் என்றென்றும் மாறாமல் இருக்கும் ..பிடிக்காத காரணங்களை உள்வாங்காமல் இருப்பதும் , பிடித்ததை மட்டும் உள்ளே வைத்து இருப்பதும்  மனிதர்களின் தன்மையும் முதிர்ச்சியும் பொறுத்தது.


பிடித்ததவை பசுமரத்தாணி போல, மனிதமும் மனிதனும் பட்டு போனாலும் சரி, உயிர்த்து போனாலும் ..நிலைத்து இருக்கும் உன்னை பிடித்த என் மனசு இருக்கும் வரை!!!


 


Thursday, July 14, 2022

ரசனைக்கு சொந்தக்காரி

ரசனைகளில் நீ பேரரசி 

உனக்கு உலகில் உள்ள அத்தனை ஒப்பனைகளும்  ஒத்து போகிறது 

அழகை தாண்டி நீ அற்பதுமானவள் ...ரசனையானவள் 

பிரம்மன் அழகான பெண்களை படைப்பான்..இல்லை 

அதனை பெண்களையும் அழகாக படைப்பான். 

ஆனா ஒரு சிலர்க்கு மட்டும் வாழ்க்கையின் அத்தனை ரசனையையும் , அதை அனுபவிக்கும் தகுதியும் வாய்ப்பும் தருவான். 

நீ பிரம்மனையே படைத்தவள் ..

நீ பிரபஞ்சத்தையும் படைத்தவள் ..

உன் ஒப்பனைகள் எவ்வளவு அழகானதும் , ரசிக்கும்தன்மையும் உள்ளது என்றும் நீ தான் அவைகளுக்கு சொந்தக்காரி என்பதும் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் 


Wednesday, July 13, 2022

மறந்தேன் ..தவறு !


ஒவ்வொரு நொடிக்கும் ..துடிக்கும் இதயத்தை மறந்தேன் 

ஒவ்வொரு நொடிக்கும் ..உள்வாங்கும் மூச்சையும் மறந்தேன் 

ஒவ்வொரு நொடிக்கும் ..என் எதிரில் நீ இல்லாமல் இருக்கும் போது  , என் பார்வையில் பட்டதெல்லாம் மறந்தேன்  

ஒவ்வொரு நொடிக்கும் ..உன் நினைவை தவிர , மற்ற எல்லா நினைவுகளையும் மறந்தேன் 

ஒவ்வொரு நொடிக்கும் ..உன் குரலே காதில் ஒலிப்பதால் ,என்னை சுற்றி எழும் சத்தத்தை மறந்தேன்

 ....

...

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையும் மறந்தேன் என்பது தவறு. ..பிரபஞ்சமே நீ என ..என் பார்வையில் , என் பேச்சில், என் நினைவில் -  நான் இருப்பது தான் சரி.


Tuesday, July 12, 2022

சந்தோசம்


வாழ்க்கையில் எல்லாம் கடந்து போகும் என்று தெரியும்

வாழ்க்கையே கடந்து போகும் என்பதும் அவ்வப்போது ஞாபகம் வரும்.

நீ வந்தது போக அல்ல. 

உன்னை நான் கடந்து போகவும் அல்ல.

நீயாகவே நானான போது, என்னை தொலைத்து உன்னை கண்ட எனக்கு ரொம்ப சந்தோசம் தான் 

Monday, July 11, 2022

ஒரு சிலர்க்கு மட்டுமே .

நினைப்பெதெல்லாம் பார்ப்பதில்லை 

பார்ப்பதெல்லாம் நினைத்ததுமில்லை 

பார்க்கும் போது நினைப்பதுமும் 

நினைக்கும் போதும் பார்ப்பதும் 

நீ மட்டுமே!!!

ஒரு சில சமயம் - நினைக்கும் போதும் பார்க்கும் போதும் பேசும் போதும் - ஒன்றாய் இருப்பது நீ மட்டுமே.

ஒரு சில நொடிகள் என்றாலும் ஒரு யுகமே கடந்து செல்கிறது 

.இது அரிது. அதிசயம்.. 

இந்த அனுபவம் எல்லோருக்கும்  கிடைப்பதில்லை ...

பிடித்தவை அருகில்.

பிடித்தவை அருகில் மனதிற்கு அருகில்.

உன்னை போல் ஏழு பேரு ..இல்லை உன்னையும் சேர்த்து ஏழு பேரு.

நீ தான் ஏழாவது .......அதிசியம்..!!. 

உன்னை போல மீண்டும் ஒருவரை பார்க்க வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் ஒரு கால கட்டத்திற்கு அப்பால் புதிதாக மனசுக்கு பிடிக்க எதுவும் இல்லை.

ஒரு வேலை உன்னை பார்க்காமல் இருந்து இருந்தால் ...அந்த காலம் எப்போவது வரும்.

எப்படியோ பார்த்தது ...மீண்டும் பார்ப்பேனா ..என்பது போயி , மீண்டும் பேசுவானா..என்பது போயி ..அருகிலே வந்து விட்டாய் ..என் மனதருகிலே வந்துவிட்டாய்...ஆனால் மனதோ என்னிடம் இல்லை !!!


 

Thursday, July 7, 2022

உயிரானவள் !!!

என் மனதுக்குள் இருக்கும் பட்டு போன காதலுக்கு உயிர் கொடுத்தது உன் முகம் 

கடந்து போன காதலும் விட்டு போன, விட்டு வந்த காதலும் அனைத்தையும் ஒன்று சேர்ந்து இருந்த ஒட்டுமொத்த மறதிகளுக்கும் நினைவூட்டியது உன் முகம் 

இதனை நாளா நான் பார்க்காமல் இருந்தது துரதிஷ்டம் ..இனி நீ காற்றாய் , சத்தமாய் இயங்கி கொண்டே இருப்பாய் என் உடம்பில் ..என் மனசு உயிரோட்டமாய் இருக்கும் உன் முகம் நினைவில் உள்ளவரை இனி பார்த்தாலும் பார்க்க விட்டாலும்.!!!