Sunday, May 12, 2024

பேரதியசமாய் நீ !!!


வாழ்க்கையில்  சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும் 

நினைத்த பார்த்தது மட்டுமல்ல , நினைத்து பார்க்காதும் கூட நடக்கும் போது  அவைகள் அதிசயமாகிறது 

கற்பனைகள் கனவாகும் போதும் , கனவுகள் நிஜமாகும் போதும், அவைகள் அதிசயமாகிறது 

ஒரே நேரத்தில் பல அதிசயங்கள் நடக்கும் போது , அவைகள் எல்லாம் பேரதியசங்களாகிறது 

பிரபஞ்சங்களில்  எப்பவாது நிகழ்வது மட்டும் அதிசயங்கள் அல்ல ...

மனசுக்குள் இருப்பவைகள் ஒரு சில  கண் எதிரே நடக்கும் போது அவைகளும் பேரதியசங்களாகிறது  

எண்ணங்கள் சில ஜனனமாகும் போது , நொடிகள் கூட யுகமாகிறது ...

யுகமும் மறு  ஜென்மம் எடுக்கும் அதிசயம் உன்னாலே நடந்தது .!!!

ஒவ்வொரு ஜென்மத்திலும் அதிசயமானவளே நீ ..என்னுள் எப்போதும் பேரதியசமாய் !!!