சொந்தம் இல்லை தான் ...ஆனாலும் !
பார்க்காத பொழுதுகள் ஒவ்வொரு நொடிகளாக முடிகிறது..அத்தனை நொடிகளும் உன்னையே சுமந்து , கடந்து செல்கிறது.
உன்னை பார்க்கும் நொடிகள் ஒவ்வொரு யுகமாக கழிகிறது ..ஒவ்வொரு யுகத்திலும் நீயே குடிகொண்டு , என்னை ஆட்கொண்டு போகிறாய்
உன் பேச்சின் ஒலிகள் , இந்த பிரபஞ்சத்த்தில் ஓம் என்ற ஒலியாய் என் காதுகள் கேட்டு கொண்டே இருக்கிறது.
என் கண்ணில் , என்னுள் பதிந்த உன் முகம், என் காதில் விழுந்த உன் வார்த்தைகள், என் மூளையில் முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கும் உன் செயல்கள், , அத்தனையும் எனக்கு சொந்தம், எனக்கு மட்டுமே சொந்தம். அதுவே ஏழேழு ஜென்மத்திற்கும் போதும். !
நீ எனக்கு சொந்தம் இல்லை என்ற போதிலும். அதற்காக வருத்தமோ , துன்பமோ இல்லை.
உன்னால் எனக்கு கிடைக்கும் சந்தோசத்தை, நிம்மதியை தவிர வேற என்ன வேண்டும் இந்த பூவுலகில்?