Monday, August 29, 2022

கடந்து போகமுடியுமா?


தெரிந்தவரை இவ்வுலகில் எல்லாம் கடந்து போகும். 

உன்னை மட்டும் நான் கடந்து போவேனோ? 

பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் 

பேசினாலும் பேசாவிட்டாலும் 

இதயத்துக்குள் ஓடும் இரத்தம் போல 

மூளைக்குள் உன்னை பற்றிய நினைப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும்

என்னுள் நீ இருக்கும் வரை ,நான் ஒரு போதும் உன்னை கடந்து செல்வதில்லை.

நொடியேனும் மறந்தும் இருந்ததில்லை ....நீ என் கண்களில் இருந்து மறைந்ததும் இல்லை. பிறகு எப்படி கடந்து போக முடியும்? 

Friday, August 5, 2022

உனக்காகவே வாழ்கிறேனா?

 உனக்காகவே வாழ்கிறேனா? இல்லை.. 

எனக்காகவே வாழ்கிறேன்...நீ அருகில்   இல்லை என்ற போதிலும் , 

உன்னால் என் இதயம் துடிக்கிறது. 

உன்னால் என் சிந்தனை உதிக்கிறது 

உன்னால் சந்தோசம் கிடைக்கிறது

உன்னால் நிம்மதி கிடக்கிறது

இது எல்லாம் கிடைக்க காசு பணம் தேவையில்லை. என் மனதில் இருக்கும் உன் முகமும் , என் காதில் ஒலிக்கும் உன் பேருமே போதும்.

என்னுள் நீ இல்லாமல் நானில்லை, நானின்றி என்னுள் நீ இல்லை. 

உனக்காக வாழவில்லை. 

உண்மை தான் .. எனக்காக மட்டுமே வாழ்கிறேன்...

ஏனெனில் என்னில் நீ அழியா பொக்கிஷமாய் !!!!

Wednesday, August 3, 2022

சொந்தம் இல்லை தான் ...ஆனாலும் !


பார்க்காத பொழுதுகள் ஒவ்வொரு நொடிகளாக முடிகிறது..அத்தனை நொடிகளும் உன்னையே சுமந்து , கடந்து செல்கிறது. 

 உன்னை பார்க்கும் நொடிகள் ஒவ்வொரு யுகமாக கழிகிறது ..ஒவ்வொரு யுகத்திலும் நீயே குடிகொண்டு , என்னை ஆட்கொண்டு போகிறாய்

உன் பேச்சின் ஒலிகள் , இந்த பிரபஞ்சத்த்தில் ஓம் என்ற ஒலியாய் என் காதுகள் கேட்டு கொண்டே இருக்கிறது. 

என் கண்ணில் , என்னுள் பதிந்த உன் முகம், என் காதில் விழுந்த உன் வார்த்தைகள், என் மூளையில் முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கும் உன் செயல்கள், , அத்தனையும் எனக்கு சொந்தம், எனக்கு மட்டுமே சொந்தம்.  அதுவே ஏழேழு ஜென்மத்திற்கும் போதும். !

நீ எனக்கு சொந்தம் இல்லை என்ற போதிலும். அதற்காக வருத்தமோ , துன்பமோ இல்லை. 

உன்னால்  எனக்கு கிடைக்கும் சந்தோசத்தை, நிம்மதியை தவிர வேற என்ன வேண்டும் இந்த பூவுலகில்?