வரமாக நீ வேண்டும்
எப்பொழுதும் மனதில் இருப்பவை கண் முன்னாடி கண்ணாடி பிம்பமாக தெரிந்து கொண்டே இருக்கும். அது ஒரு மாயை.
எப்பொழுதாவது உன்னை நேரில் பார்க்க அவவப்போது எனக்கு வரம் வேண்டும். என் கண்ணனுக்கு முன்னாடி நீ பட்டால், புதிய முகம் புதிய அனுபவம் மனதில் சேர்ந்து கொண்டே இருக்கும். அது ஒரு மனதுக்கு புது பொழிவு ..
நினைக்கும் போதெல்லாம் உன்னை பார்க்கும் வரம் வேண்டும்.
மனமெல்லாம் உன் நினைவே இருக்கும் வரம் வேண்டும்
உன் நினைவாகவே நான் இருக்க வரம் வேண்டும்
நீயாகவே நான் இருக்க வரம் வேண்டும்
எல்லா வரமாகவே நீ இருக்க வேண்டும்.
நீயே வரமாக வேண்டும் !!