குறிஞ்சி மலர்
12 வருடங்களுக்கு முன்னால் பார்த்த குறிஞ்சி மலர்
இதோ இந்த வருடம் இந்த நாள் மலர்ந்து இருக்கிறது
காத்து இருந்ததால், பொறுத்து இருந்ததால் -மலர்ந்ததா?
மாற்றம் தெரியவே இல்லை. அதே மணம், அதே வண்ணம், அதே தோற்றம்
மறுபடியும் பார்க்க, அதே சந்தோசம் இல்லை,அதை விட சந்தோசம்,
மனதில் எத்தனை ஈர்ப்பு...ரோஜாவின் அழகும், மல்லிகையும் மனமும் கலந்த இதை
நேசிப்பதும் ரசிப்பதும் மனதின் தன்மை. அது குறையாமல்,மறவாமல் இருப்பதும் மனிதத்தின் தன்மை.