பார்த்த நொடியில் இருந்து நிமிடங்களாகுவதுற்கு முன்பே
என் மனதில் மீதம் இருந்த வெற்றிடத்தில் உன் பார்வையும், உன்முகமும் ஆர்ப்பரித்துக் கொண்டது.
மணிதுளிகளாகும் முன்பே என் மனம் முழுவதும் நீயே அடைத்துகொண்டாய்.
அடடா...என் பார்வையில் இருந்து நீ , நான் உன்னை விட்டு விலக நேர்ந்த போது......!
வரவில்லையே என் மனது என்னோடு. உன்னை பற்றிய எண்ணங்களும் , உன் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டது.
என் உடல் மட்டும் நடந்தது, மனம் இல்லாம் போனது. உண்மையைலே மனமே இல்லாமல்....உன்னோடு தான் ஒட்டிக் கொண்டதே.
யார் நீ? என் மனைவியா? என் தோழியா? ? என் சகோதிரியா? இல்லை முன்பின் தெரிந்த முகமா..?
இல்லையா.
பின் எப்படி என்மனது உன்னை விட்டு என்னோடு வரவில்லை.
எதுவுமே சொந்தமில்லாத நீ, என் மனதை மட்டும் சொந்தமாக்கி கொள்ள நான் விடுவேனா?
தந்து விடு என் மனதை. அது எனக்கு சொந்தமானது. உன்னை போன்ற (அழகான) அன்னியர்கள் ஆக்கிரமித்தால் நான் பித்தனாகி விடுவேன்.
திருப்பிக் கொடு பெண்ணே!. இல்லை திரும்பி பார் கண்ணே!!.